முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பந்தநல்லூர் கோயில் வரலாறு

ஸ்ரீ பசுபதீஸ்வர சுவாமி திருக்கோயில் பந்தனை நல்லூர்

  கோயில்   சிறப்பு சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ,  சிவனின் தேவாரம் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 35 வது   தேவாரஸ்தலம் ஆகும் .  கோயில் விபரம் மூவலர்                  :   பசுபதீஸ்வரர் அம்மன்                 :  வேணுபூஜாம்பிகை , கம்பனையதோழி தல விருட்சம்      :   சரக்கொன்றை   தீர்த்தம்                 :   சூரிய தீர்த்தம்   புராண பெயர் :  பந்தணைநல்லூர்     தேவாரம்   பாடியவர்கள் சம்பந்தர் திருநாவுக்கரசர் தேவாரப்பதிகம் தொண்டர தொழுதேத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணிமுடியார் தூய நீற்றார் இண்னடச் சனடமுடீயார் ஈமஞ் சூழ்ந்த இடுபிணக்காட்டு ஆடலார் ஏமந் தோறும் அண்டத்துக் கப்பறுத்தார் ஆதி யானார் அருக்கனாயார் அழலா யடியார் மேலப் பண்டை வினனயறுப்பார் பைங்க ணேற்றார் பலியேற்றார் பந்தனண நல்லு ராரே -திருநாவுக்கரசர் அமைப்பு ஏழு நிலை ராஜகோபுரத்துடன் ...

ஸ்ரீ பசுபதீஸ்வர சுவாமி திருக்கோயில் பந்தனை நல்லூர்

 

கோயில் சிறப்பு

சிவன் புற்றாக அமைந்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்சிவனின் தேவாரம் பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 35வது தேவாரஸ்தலம் ஆகும்

கோயில் விபரம்

மூவலர்                 : பசுபதீஸ்வரர்
அம்மன்                : வேணுபூஜாம்பிகை, கம்பனையதோழி
தல விருட்சம்     : சரக்கொன்றை 
தீர்த்தம்                : சூரிய தீர்த்தம் 
புராண பெயர்பந்தணைநல்லூர்  

தேவாரம் பாடியவர்கள்

சம்பந்தர் திருநாவுக்கரசர்

தேவாரப்பதிகம்

தொண்டர தொழுதேத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணிமுடியார் தூய
நீற்றார் இண்னடச் சனடமுடீயார் ஈமஞ் சூழ்ந்த இடுபிணக்காட்டு ஆடலார்
ஏமந் தோறும் அண்டத்துக் கப்பறுத்தார் ஆதி யானார் அருக்கனாயார்
அழலா யடியார் மேலப் பண்டை வினனயறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தனண நல்லு ராரே

-திருநாவுக்கரசர்

அமைப்பு

ஏழு நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்கள் அமைந்துள்ளன. நுழைவு வாயிலில் கோட்டை முனியாண்டவர் அருள்பாலிக்கிறார். சுவாமி கிழக்கு நோக்கியும் அம்மன் வடக்கு நோக்கியும் தவக்கோலத்தில் உள்ளனர். உள்பிரகாரத்தில் நவ லிங்கங்கள், முருகன், கஜலட்சுமி, அன்னபூரணி, சரஸ்வதி, சட்டைநாதர், தட்சிணாமூர்த்தி,  மற்றும் நேர்கோட்டில் நவக்கிரகங்கள் உள்ளன. விநாயகர் நிருதி கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

வரலாறு  

சிவனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்திருந்தபோது பார்வதிக்குபந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது, இதனால் சிவன் நான்கு வேதத்தையும் நான்கு பந்துகளாக மாற்றி பார்வதியிடம் கொடுக்கிறார் பார்வதியும் தொடர்ந்து விளையாடுகிறாள். பார்வதி விளையாடுவதால் சூரியன் மறையாமல் வெளிச்சம் தருகிறார். இதனால் இருள் சூழாமல் போனது, இதனால் மாலைவேளையில் முனிவர்கள் சந்தியாவந்தனம் செய்ய இயலாமத நிலை ஏற்பட்டது. முனிவர்கள் சூரியனிடம் செல்ல, சூரியனோ- நான் பார்வதியின் கோபத்திற்கு ஆளாக மாட்டேன் என்று கூறிவிடுகிறார். இதனால் அனைவரும் சிவனிடம் சென்று முறையிடுகின்றனர் சிவன் பார்வதியிடம் சொல்கிறார் இவர் வந்ததை பார்வதி கவனிக்கவில்லை கோபம் கொண்ட சிவன் பார்வதியை பசுவாக சபிக்கிறார்.

சாபம் பெற்ற பார்வதியோ சாபவிமோசனம் கோரி சிவனிடம் வேண்டுகிறார், சிவன் பந்தை காலால் எத்த அது பூமியில் சரக்கொன்றை மரத்தின் அடியில் விழுகிறது இந்த மரத்தின் அடியில் உள்ள சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து அபிஷேகம் செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்றார். பந்து அணைந்த தலம் ஆதலால் இவ்விடத்தின் பெயர் "பந்தனை நல்லூர்என பெயர் பெற்றது.

பார்வதியை காப்பாற்ற மகாவிஷ்ணு இடையர் வடிவில் பசுவை அழைத்துக்கொண்டு இத்தலம் வருகிறார் பகல் பொழுதில் பசுவை மேய விட்டு மாலையில் அருகிலுள்ள கன்வ மகரிஷி ஆசிரமத்தில் பால் கொடுத்து வந்தார். ஒருநாள் பசு புற்றிலிருந்து லிங்கத்தை பார்த்தது அதன் மேல் பாலைச் சொரிந்து விடுகிறது, அன்று மாலை மகரிஷிக்கு பால் இல்லை. இதற்கான காரணம் அறிய பசுவின் பின்னால் விஷ்ணு செல்கிறார், புற்றின் மீது பால் சொரிவதை கண்டவுடன் பசுவை அடிக்கிறார். பசு துள்ளிக்குதித்து புற்றில் காலை வைக்க பசுவும் இடையனாக வந்த விஷ்ணுவையும் சுய உருவம் பெறுகின்றனர்.

சாப நிவர்த்தி பெற்றவுடன் தன்னை திருமணம் செய்ய சிவனிடம் வேண்டுகிறார் இதற்கு சிவன் வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்து சேர் என்கிறார். அதன்படி செய்து அம்மன் சிவனை திருமணம் செய்கிறார் சிவன் மூலஸ்தானத்தில் கல்யாண சுந்தரராக அருள்பாலிக்கிறார்

பெருமைகள்

பசுவின்‌ பதியாக வந்ததால்‌ சிவன்‌ பசுபதீஸ்வரர் ஆனார். சுவாமியின்‌ திருமணத்தை நவகிரகங்கள் நேர்கோட்டில்‌ நின்று தரிசிப்பதால், அனைத்தும் அனுக்இரக மூர்த்திகளாக விளங்குகின்றன. நடராஜருக்கு இங்கு தனி சபை கிடையாது. விஷ்ணு தனி கோயிலில்‌ ஆதிகேசவப்பெருமாளாக அருள்பாலிக்கறார். காம்பேலி மன்னன் தன் மகனுக்கு பார்வை பெற்ற தலம். பெருமாள், கன்வர், வாலி, இந்திரன், பிரம்மாசூரியன்‌ ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்அருணகிரிநாதர் தன்‌ திருப்புகழில் இத்தல முருகனை பாடியுள்ளார். ராமலிங்க அடிகளாரும், பட்டீஸ்வரம் மவுன குருசாமியும்‌ பாடியுள்ளனர்.